Skip to main content

Posts

Showing posts with the label sujatha

எண் பெயர் #கட்டியங்காரன் உருவான கதை

  எண் பெயர் #கட்டியங்காரன் புத்தக வெளியீடு பதிப்புத் தொழிலுக்கு வரும்வரை என்னுடைய வாசிப்பு அதிகபட்சமாக ஆங்கிலத்தில்தான் இருந்தது. மைலாப்பூரில் பிறந்து வளர்ந்ததாலோ   என்னவோ கமலஹாசன் , மணிரத்னம் , சுஜாதா ஆகிய மூவரின் தீவிர ரசிக னாக நான் இருந்த காலகட்டம் அது . இன்ஃபோசிஸ் வலைப்பூக்களில் எழுதும்போதுதான் வெவ்வேறு ஊர்கள் , வாசிப்புப் பின்புலம் , சினிமா \ அரசியல் பார்வை உள்ளவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது . மதுரையிலிருந்து வந்த அவநி அரவிந்தனின் நட்பு அங்குதான் தொடங்கியது .   அவனுடைய சிறுகதைத் தொகுப்பை நிச்சயம் ஒரு நாள் வெளியிடுவேன் . கல்லூரி நண்பர்கள் கார்த்திக் , ஸ்ரீநிவாஸ் , நான் ஆகிய மூவ ரும் சேர்ந்து நண்பன் என்ற பெயரில் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பை பாலு மஹேந்திராவின் மாணவர்   பாலா படித்துவிட்டுப் பாராட்டினார். அப்பாவை ஒரு நாள் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார். டிசம்பர் 2013 தலைமுறைகள் வெளியானது. அவரைச் சந்திக்கும் முன்னால் இன்னும் எங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் , ஒரு புத்தகமாவது பெயர் சொல்லும் அளவிற்கு எழுதிவிட வேண்டும் என்று எங்களுக்குத் தோன...

பயணிகள் கவனத்திற்கு

ஷெர்லாக் ஹோம்ஸ்! இந்தக் கற்பனை துப்பறிவாளரின் கதாப்பாத்திரம் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி 70 வெவ்வேறு நடிகர்களால் அந்தந்த காலகட்டத்திற்கு மெருகூட்டப்பட்டு அதேப் பொலிவுடன் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டேயிருக்கும் கின்னஸ் சாதனை! சமீபத்தில் பிபிஸி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் இந்தப் புதிய பதிப்பில் வரும் ஷெர்லாக் செல்ஃபோன் உபயோகிக்கிறார். நவீன சாதனங்களைப் பயன்படுத்தித் துப்பறிகிறார். அதனால் அது புது ரசிகர்களை உண்டாக்கியிருக்கிறது. ஷெர்லாக் ஹோம்சை உருவாக்கியவர் ஆர்தர் கானன் டாயல்!  பெண் எழுத்தாளர்களில் அகாதா கிரிஸ்டி எழுதிய "கர்டைன்”நாவலின் கற்பனைக் கதாப்பாத்திரமான பொய்ரோட், கதைப்படி இறந்தபொழுது   வாசகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி எழுதிய கடிதங்கள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டன. தன் 50வது வயதிற்கு மேல் த்ரில்லர் கதைகள் எழுதத் தொடங்கிய சிட்னி ஷெல்டன் இன்றுவரை தன் புத்தகங்கள் மூலம்  இறவாப் புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதேப் போன்று, தமிழ்ச் சூழலில்...தகவல் களஞ்சியங்களும், உலக நாடுகளுக்கு விசாவும் அரிதாகக் கிடைக்கும் காலக்கட்டத்தில் வெளிவந்த தமிழ்வாணனின் "சங்கர்லால் த...